Sydneyசிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

-

சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, 29 வயதுடைய நபரொருவரின் கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

31 வயதுடைய நபர் ஒருவர் தம்மை தாக்கிவிட்டு ஓடியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளித்து பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை 2.10 மணியளவில் Ashfield ஆர்தர் வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கையில் பலத்த காயத்துடன் இருந்த அந்த நபர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...