Breaking Newsமெல்பேர்ண் மற்றும் பல பகுதிகளை சீர்குலைத்த வானிலை - மக்களுக்கு எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் பல பகுதிகளை சீர்குலைத்த வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை

-

விக்டோரியா மாகாணத்தின் மெல்பேர்ன் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 120,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி நிலவரப்படி 180,000 வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருந்ததாகவும், மீண்டும் இணைக்கக்கூடிய பாதுகாப்பான பகுதிகளுக்கு மட்டும் பராமரிப்புக்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வானிலைக்கு முகங்கொடுத்து அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உழைக்கும் அனைத்து அவசர சேவைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக மாநில பிரதமர் ஜெசிந்தா ஆலன் இன்று தெரிவித்தார்.

விக்டோரியா மாகாணத்தில் Cape Otway முதல் Nelson வரை புயல் உருவாகும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Powercor குழுக்கள் காற்றாலைகள் சேதம் உட்பட 239 சம்பவங்களுக்கு அழைக்கப்பட்டு, மேற்கு விக்டோரியாவில் 34,600 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Geelong மற்றும் Shepparton போன்ற வடக்குப் பகுதிகளும், Dromana, Hastings, Flinders, Red Hill, Mt Martha, Mount Eliza மற்றும் Frankston தெற்குப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.

விக்டோரியாவின் அவசர சேவைகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2800க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் சாய்ந்து கட்டிட சேதம் பற்றியதாகும்.

மெல்பேர்ணைச் சுற்றி மின்சாரம் இல்லாமல் சுமார் 90 சந்திப்புகள் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு அவசரகால மேலாண்மை ஆணையர் Rick Nugent கேட்டுக்கொண்டார்.

மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துவிட்டு வீட்டிலிருந்தே தங்கள் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மோசமான வானிலை காரணமாக மெல்போர்னில் உள்ள Sandringham, Cranbourne மற்றும் Packanum நகரங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், Eltham-இல் உள்ள St Helena Secondary College மற்றும் Yarra Ranges Special Developmental School மற்றும் பல அரசு சாரா பள்ளிகள் ஆபத்தான சூழ்நிலை காரணமாக இன்று மூடப்பட்டன.

விக்டோரியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வரை ஆபத்தான காற்றுடன் கூடிய மழை நிலைமை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Horsham, Warrnambool, Maryborough, Ballarat, Geelong, Melbourne, Traralgon மற்றும் Bairnsdale போன்ற பகுதிகளில் மணிக்கு 90km வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா எல்லையை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...