NewsGold Coast Dreamworld இல் புலியால் தாக்கப்பட்ட பணிப்பெண்

Gold Coast Dreamworld இல் புலியால் தாக்கப்பட்ட பணிப்பெண்

-

Gold Coast-ல் உள்ள Dreamworld பூங்காவில் பணிபுரிந்த பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், Gold Coast மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Dreamworld-ல் விலங்குகளை கையாள்பவராக பணிபுரியும் 30 வயதுடைய இந்த பெண்ணுக்கு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு கைகளிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மருத்துவர்கள் அவளை Gold Coast பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் முதலுதவி அளித்தனர்.

Dreamworld பூங்கா இன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Gold Coast-ன் Dreamworld பூங்காவில் ஒன்பது சுமத்ரா மற்றும் வங்காளப் புலிகள் உள்ளன. மேலும் இது Dreamworldன் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பூங்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நன்கு பயிற்சி பெற்ற விலங்குகளை கையாள்பவர் புலியால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது அரிதான சம்பவம் என்றும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து...

புதிய தொழில்நிட்பத்தில் ஹெலிகாப்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் தன்னாட்சி ஹெலிகாப்டர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுடனான ஒப்பந்தத்தின்படி விக்டோரியா மாநிலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக தானியங்கி ஹெலிகாப்டர்களை உருவாக்கலாம் என நேற்று முடிவடைந்த Land Forces...

இன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

இன்று நடைபெறவிருக்கும் 2024 NSW உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மாநில வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் 128 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய பணிகள் நேற்று...

டிஜிட்டல் மயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்கள்

அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேவைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், சில நிதி நிறுவனங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பேர்த்தில் அமைந்துள்ள Bankwest Morley...

மெல்பேர்ண் போராட்டத்தால் விக்டோரியா வரி செலுத்துவோருக்கு $30 மில்லியன் இழப்பு

மெல்பேர்ணில் மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக விக்டோரியாவின் வரி செலுத்துவோர் $30 மில்லியன் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரியவந்துள்ளது. நிலப்படைகள் கண்காட்சி மாநாடு மற்றும் கண்காட்சிக்கு...

இன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

இன்று நடைபெறவிருக்கும் 2024 NSW உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மாநில வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் 128 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய பணிகள் நேற்று...