Melbourneமெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

மெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

-

மெல்பேர்ண் பல்பொருள் அங்காடியில் கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு 8.45 மணியளவில், Seddon, Charles Street இல் உள்ள FoodWorks கடையின் ஊழியர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் இருவர் அச்சுறுத்தி கத்தியைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சந்தேகநபர்கள் இருவரும் மதுபானம் வைக்கப்பட்டிருந்த இடத்தை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் ஊழியர் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு சிறார்கள் என நம்பப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...