Melbourneமெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

மெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

-

மெல்பேர்ண் பல்பொருள் அங்காடியில் கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு 8.45 மணியளவில், Seddon, Charles Street இல் உள்ள FoodWorks கடையின் ஊழியர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் இருவர் அச்சுறுத்தி கத்தியைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சந்தேகநபர்கள் இருவரும் மதுபானம் வைக்கப்பட்டிருந்த இடத்தை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் ஊழியர் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு சிறார்கள் என நம்பப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

பிளாஸ்டிக் குடிநீர் குழாய்களுக்காக பிரபல ஆஸ்திரேலிய உணவகத்திற்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபலமான உணவகச் சங்கிலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Bubble tea மற்றும் பேக்கரி சங்கிலியான Top Tea-இற்கு $2,035 அபராதம்...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...