Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

கடந்த வார இறுதியில் விக்டோரியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 40,000 பேர் இன்னும் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காற்றின் வேகம் தணிந்துள்ளதால் வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிவாரண சேவை குழுக்கள் இன்னும் பேரழிவுகளுக்கு பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளை அவசர சேவைக் குழுவினர் பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் கட்டிட சேதம் தொடர்பானவையாகும்.

மின்சாரம் இல்லாத 6,700 பேருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Powercor Australia தெரிவித்துள்ளது.

உடைந்த மின்கம்பிகள், மரங்கள் முறிந்து வீழ்ந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மேலதிக பணியாளர்களை நியமித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விக்டோரியாவில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகளை சேதப்படுத்தியதாலும் 180,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மோசமான காலநிலை காரணமாக 63 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, பொது போக்குவரத்து மற்றும் சாலைகளும் பாதிக்கப்பட்டன. சாலையில் மரங்கள் விழுந்ததால் மெல்பேர்ண் வழியாக செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள Wilson’s Promontory ஐ மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, இது வார இறுதியில் பதிவு செய்யப்பட்ட வேகமானதாக நம்பப்படுகிறது.

மெல்பேர்ணில் இன்று வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் நாளை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...