Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விக்டோரியாவில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

கடந்த வார இறுதியில் விக்டோரியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 40,000 பேர் இன்னும் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காற்றின் வேகம் தணிந்துள்ளதால் வானிலை எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிவாரண சேவை குழுக்கள் இன்னும் பேரழிவுகளுக்கு பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளை அவசர சேவைக் குழுவினர் பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் கட்டிட சேதம் தொடர்பானவையாகும்.

மின்சாரம் இல்லாத 6,700 பேருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Powercor Australia தெரிவித்துள்ளது.

உடைந்த மின்கம்பிகள், மரங்கள் முறிந்து வீழ்ந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மேலதிக பணியாளர்களை நியமித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விக்டோரியாவில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகளை சேதப்படுத்தியதாலும் 180,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மோசமான காலநிலை காரணமாக 63 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, பொது போக்குவரத்து மற்றும் சாலைகளும் பாதிக்கப்பட்டன. சாலையில் மரங்கள் விழுந்ததால் மெல்பேர்ண் வழியாக செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நேற்று அதிகாலை 2.29 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள Wilson’s Promontory ஐ மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, இது வார இறுதியில் பதிவு செய்யப்பட்ட வேகமானதாக நம்பப்படுகிறது.

மெல்பேர்ணில் இன்று வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் நாளை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...