Newsபாலியில் டைவிங் சென்ற விக்டோரியா பெண் மரணம்

பாலியில் டைவிங் சென்ற விக்டோரியா பெண் மரணம்

-

இந்தோனேசியாவின் பாலியில் டைவிங் பயணத்தின் போது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விக்டோரியாவில் இருந்து பாலிக்கு சென்றிருக்கும் இந்தப் பெண், சனிக்கிழமையன்று Nusa Penida தீவில் உள்ள Manta Point-ல் மற்றொரு குழுவுடன் டைவிங் செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

டைவிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் தகவல் அளித்ததையடுத்து, உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் டைவிங் நடவடிக்கைகள் தொடங்கியதாக காவல்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

தண்ணீருக்கு அடியில் சென்று சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் நீரின் மேற்பரப்பிற்கு வந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறினார்.

படகில் திரும்பிய போது, ​​மயங்கி விழுந்து விழுந்து கிடந்ததால், படக்குழுவினர் அவளுக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

பாலியில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பெண்ணின் குடும்பத்திற்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...