Newsபிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

-

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுத்போட்டில் 3 சிறுமிகள் கொடூரமாக ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் பெல்வாஸ்ட்டில் வன்முறைச் சம்பவங்கள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.

நடன மற்றும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுமிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் 8 சிறுமிகளும் 2 பொது மக்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, முஸ்லீம் பள்ளிவாசல்கள், அரசியல் புகலிடம் கோரியவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.

மகிழுந்துகள், கட்டடங்கள் என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 100க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்திய தவறான செய்திகள் பரவியதனால் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி தன்மை மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் பரவியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்ட சிறு பராயத்தவர்கள் உட்பட பலருக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இன்று மட்டும் மூவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...