Newsபிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

-

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுத்போட்டில் 3 சிறுமிகள் கொடூரமாக ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் பெல்வாஸ்ட்டில் வன்முறைச் சம்பவங்கள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.

நடன மற்றும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுமிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் 8 சிறுமிகளும் 2 பொது மக்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, முஸ்லீம் பள்ளிவாசல்கள், அரசியல் புகலிடம் கோரியவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.

மகிழுந்துகள், கட்டடங்கள் என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 100க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்திய தவறான செய்திகள் பரவியதனால் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி தன்மை மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் பரவியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்ட சிறு பராயத்தவர்கள் உட்பட பலருக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இன்று மட்டும் மூவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...