Newsபிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

-

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுத்போட்டில் 3 சிறுமிகள் கொடூரமாக ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் பெல்வாஸ்ட்டில் வன்முறைச் சம்பவங்கள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.

நடன மற்றும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுமிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் 8 சிறுமிகளும் 2 பொது மக்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, முஸ்லீம் பள்ளிவாசல்கள், அரசியல் புகலிடம் கோரியவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.

மகிழுந்துகள், கட்டடங்கள் என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 100க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்திய தவறான செய்திகள் பரவியதனால் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி தன்மை மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் பரவியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்ட சிறு பராயத்தவர்கள் உட்பட பலருக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இன்று மட்டும் மூவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...