Newsபிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

-

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுத்போட்டில் 3 சிறுமிகள் கொடூரமாக ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் பெல்வாஸ்ட்டில் வன்முறைச் சம்பவங்கள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.

நடன மற்றும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுமிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் 8 சிறுமிகளும் 2 பொது மக்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, முஸ்லீம் பள்ளிவாசல்கள், அரசியல் புகலிடம் கோரியவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.

மகிழுந்துகள், கட்டடங்கள் என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 100க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்திய தவறான செய்திகள் பரவியதனால் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி தன்மை மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் பரவியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்ட சிறு பராயத்தவர்கள் உட்பட பலருக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இன்று மட்டும் மூவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...