Newsஒலிம்பிக் வீராங்கனையை தாக்கி தீ வைத்து எரித்த காதலன்

ஒலிம்பிக் வீராங்கனையை தாக்கி தீ வைத்து எரித்த காதலன்

-

கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிரான்ஸ் நஸோயா கவுண்டி பொலிஸ் அதிகாரி ஜெரமையா கூறுகையில், “2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல, 2022 ஆம் ஆண்டில், கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனையான டமரிஸ் முத்தீ கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். 2023 ஆம் ஆண்டில், உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான பெஞ்சமின் கிப்லாகாட் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...