Newsபாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

பாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

-

நியூ சவுத் வேல்ஸில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

15 சதவீத ஊதிய உயர்வு கோரி தொழில்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று காலை 7 மணி முதல் 12 மணி நேரம் வெளிநடப்பு செய்யப்போவதாக செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் (NSWNMA) உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கைத்தொழில் உறவுகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் சிகிச்சை தொடர்பான பிற தாமதங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால் வரும் மணிநேரங்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தீவிர நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறினார்.

முன்னதாக திட்டமிடப்பட்டு இன்று மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கும் மாநில சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷே கேன்டிஷ் கூறுகையில், அரசு தனது உறுப்பினர்களின் கவலைகளுக்கு செவிசாய்க்காததால் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...