Newsபாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

பாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

-

நியூ சவுத் வேல்ஸில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

15 சதவீத ஊதிய உயர்வு கோரி தொழில்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று காலை 7 மணி முதல் 12 மணி நேரம் வெளிநடப்பு செய்யப்போவதாக செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் (NSWNMA) உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கைத்தொழில் உறவுகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் சிகிச்சை தொடர்பான பிற தாமதங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால் வரும் மணிநேரங்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தீவிர நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறினார்.

முன்னதாக திட்டமிடப்பட்டு இன்று மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கும் மாநில சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷே கேன்டிஷ் கூறுகையில், அரசு தனது உறுப்பினர்களின் கவலைகளுக்கு செவிசாய்க்காததால் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...