Newsபாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

பாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் NSW சுகாதார ஊழியர்கள்

-

நியூ சவுத் வேல்ஸில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

15 சதவீத ஊதிய உயர்வு கோரி தொழில்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று காலை 7 மணி முதல் 12 மணி நேரம் வெளிநடப்பு செய்யப்போவதாக செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் (NSWNMA) உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கைத்தொழில் உறவுகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் சிகிச்சை தொடர்பான பிற தாமதங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால் வரும் மணிநேரங்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தீவிர நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறினார்.

முன்னதாக திட்டமிடப்பட்டு இன்று மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கும் மாநில சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷே கேன்டிஷ் கூறுகையில், அரசு தனது உறுப்பினர்களின் கவலைகளுக்கு செவிசாய்க்காததால் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...