Newsஉலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்!

உலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்!

-

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று Informa Connect Academy, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் SpaceX கார் நிறுவன உரிமையாளர் , விண்வெளிக்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் ரொக்கெட்டுக்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு வணிக வாகன தொழில்நுட்ப நிறுவனமான SpaceX மற்றும் X சமூக வலைத்தளம், Star Link செய்மதி இணைப்பு நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் உள்ளார்.

SpaceX மற்றும் SpaceX நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Informa Connect Academy தெரிவித்துள்ளது.

அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் வணிக நடவடிக்கைகளில் மின் உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் முனையங்கள், விவசாயம் மற்றும் பொது தளபாடங்கள், தொழில் பூங்காக்கள் நீர் சுத்திகரிப்பு, வீதி மற்றும் ரயில் நெட்வொர்க்குகள், தரவு மையங்கள், விவசாயம், உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 பில்லியன் டொலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86 வீதமாக உள்ளது.

இந்தப் பட்டியலில் Meta நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (facebook) , அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033 க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...