Melbourneமெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து - இரு சிறுமிகள் பலி

மெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – இரு சிறுமிகள் பலி

-

மெல்பேர்ணின் சிட்னாம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது, ​​அவசர சேவைப் பணியாளர்கள் வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்தவர்கள் 5 வயது சிறுமி மற்றும் அவரது 21 மாத சகோதரியும் ஆகும். மேலும், அந்த வீட்டில் உள்ள 3 வயது சிறுவன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

நேற்று காலை இரண்டு சிறுமிகளும் உயிரிழந்ததாகவும், சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன, தீ விபத்து ஏற்பட்ட போது அல்லது சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீ விபத்து மற்றும் வெடிபொருள் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை இந்த வீட்டில் வசிக்கவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தீ பரவுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த பிள்ளைகள் தாயுடன் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்தின் போது அவர் வீட்டில் இருந்தாரா என்பது தெரியவரவில்லை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...