Melbourneமெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து - இரு சிறுமிகள் பலி

மெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – இரு சிறுமிகள் பலி

-

மெல்பேர்ணின் சிட்னாம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது, ​​அவசர சேவைப் பணியாளர்கள் வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்தவர்கள் 5 வயது சிறுமி மற்றும் அவரது 21 மாத சகோதரியும் ஆகும். மேலும், அந்த வீட்டில் உள்ள 3 வயது சிறுவன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

நேற்று காலை இரண்டு சிறுமிகளும் உயிரிழந்ததாகவும், சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன, தீ விபத்து ஏற்பட்ட போது அல்லது சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீ விபத்து மற்றும் வெடிபொருள் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை இந்த வீட்டில் வசிக்கவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தீ பரவுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த பிள்ளைகள் தாயுடன் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்தின் போது அவர் வீட்டில் இருந்தாரா என்பது தெரியவரவில்லை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...