Melbourneமெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து - இரு சிறுமிகள் பலி

மெல்பேர்ணில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – இரு சிறுமிகள் பலி

-

மெல்பேர்ணின் சிட்னாம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது, ​​அவசர சேவைப் பணியாளர்கள் வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்தவர்கள் 5 வயது சிறுமி மற்றும் அவரது 21 மாத சகோதரியும் ஆகும். மேலும், அந்த வீட்டில் உள்ள 3 வயது சிறுவன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

நேற்று காலை இரண்டு சிறுமிகளும் உயிரிழந்ததாகவும், சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன, தீ விபத்து ஏற்பட்ட போது அல்லது சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீ விபத்து மற்றும் வெடிபொருள் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை இந்த வீட்டில் வசிக்கவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தீ பரவுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த பிள்ளைகள் தாயுடன் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்தின் போது அவர் வீட்டில் இருந்தாரா என்பது தெரியவரவில்லை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...