Cinemaமீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

மீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look poster வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடு காரணமாகப் பல ஆண்டுகள் இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு “கேங்கர்ஸ்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று (12 செப்டெம்பர்) நடிகர் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை கூட்டணி, ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும், கைப்புள்ள, வீரபாகு மற்றும் சிங்காரம் என்ற கதாபாத்திரங்களில் கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...