Uncategorizedமீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

மீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look poster வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடு காரணமாகப் பல ஆண்டுகள் இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு “கேங்கர்ஸ்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று (12 செப்டெம்பர்) நடிகர் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை கூட்டணி, ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும், கைப்புள்ள, வீரபாகு மற்றும் சிங்காரம் என்ற கதாபாத்திரங்களில் கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest news

இத்தாலியில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் கொன்ற மெல்பேர்ண் நபர்

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் சர்வதேச கைது வாரண்டின் பேரில் ரோமில் கைது செய்யப்பட்டார்...

Telegram செயலிக்கு தடை விதித்த பிரபல நாடு

Telegram செயலியை பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. Telegram செயலி பயனர்களின் இரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் இராணுவ புலனாய்வு துறை தெரிவித்ததையடுத்து,...

18 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற ஆஸ்திரேலியர்களுக்கு நோட்டீஸ்

ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) சுமார் $18 பில்லியன் இழந்த மற்றும் உரிமை கோரப்படாத மேல்நிதி நிதிகள் இருப்பதாக கூறுகிறது. தற்போதைய 17.8 பில்லியன் டாலர் பண...

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...