SportsAccounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

Accounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

-

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த நேதன் பிராக்கன், மொத்தமாக கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகியது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் பிராக்கன் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் T20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன், 2001 முதல் 2009 வரை ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.

தனது அபார திறமையின் காரணமாக நேதன் பிராக்கன் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார்.

ஆனால் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் வரும் காயம் தான் பிராக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்த போதும், அவரால் பழைய மாதிரி சிறப்பாக செயல்பட முடியவில்லை.

அதேபோல் IPL தொடரில் 2011ஆம் ஆண்டு RCB அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் IPL தொடரில் விளையாடுவதற்கு பிராக்கன் வரவில்லை. இதன்பின் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விலகிய நேதன் பிராக்கன், தற்போது நியூ சவுத் மேல்ஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 47 வயதாகும் நேதன் பிராக்கன், கடந்த ஆண்டு அரசியலிலும் குதித்தார்.

அவர் தற்போது கிரிக்கெட் களத்தில் பயிற்சியாளராக கூட பணியாற்றாமல், விலகி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...