SportsAccounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

Accounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

-

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த நேதன் பிராக்கன், மொத்தமாக கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகியது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் பிராக்கன் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் T20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன், 2001 முதல் 2009 வரை ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.

தனது அபார திறமையின் காரணமாக நேதன் பிராக்கன் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார்.

ஆனால் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் வரும் காயம் தான் பிராக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்த போதும், அவரால் பழைய மாதிரி சிறப்பாக செயல்பட முடியவில்லை.

அதேபோல் IPL தொடரில் 2011ஆம் ஆண்டு RCB அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் IPL தொடரில் விளையாடுவதற்கு பிராக்கன் வரவில்லை. இதன்பின் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விலகிய நேதன் பிராக்கன், தற்போது நியூ சவுத் மேல்ஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 47 வயதாகும் நேதன் பிராக்கன், கடந்த ஆண்டு அரசியலிலும் குதித்தார்.

அவர் தற்போது கிரிக்கெட் களத்தில் பயிற்சியாளராக கூட பணியாற்றாமல், விலகி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...