Cinemaசெண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் -...

செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு திருமணம்!

-

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.

தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு பக்கக் கதை’. இந்தப் படத்தை முடித்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமைந்தது.

இந்தப் படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ‘பூமராங்’, ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்திலும், பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ்த் திரையுலகத்தின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அசோக் செல்வனுடன் ‘சபாநாயகன்’, விஜய் ஆண்டனியுடன் ‘மழைப் பிடிக்காத மனிதன்’ திரைப்படங்களில் நடித்திருந்தார்

கடந்த ஒகஸ்ட் 22ம் திகதி மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு இருவருக்கும் சத்தமில்லாமல் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. தற்போது மேகா ஆகாஷ், தான் காதலித்த சாய் விஷ்ணுவை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று (செப்டம் 15ஆம் திகதி) காலை 11 மணிக்கு நடந்து முடிந்தது. மேகா ஆகாஷின் அம்மா கேரளா, அப்பா தெலுங்கு, மாப்பிள்ளை சாய் விஷ்ணு தமிழ் என்பதால் தமிழ், கேரளா, தெலுங்கு ஃபுயூஷன் ஸ்டைலில் இத்திருமணம் நடைபெற்றது. செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் இசைக்க இருவரும், இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துகொண்டனர். மாப்பிள்ளை விஷ்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் – கற்பகம் தம்பதியின் மகன் என்பதால் திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.

நேற்று மாலை நடபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுதவிர அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் இத்திருமணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

நன்றி தமிழன்

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...