Newsபிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

-

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள், கடுகு, கடுகுப்பொடி கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.

அவற்றில் வேர்க்கடலையும் கலந்திருக்கலாம் என்றும், அவற்றை உண்பவர்களுக்கு அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

அவ்வகையில், கடுகுப்பொடி போன்ற பொருட்கள் உள்ள சாண்ட்விச்கள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு ஒன்றில் இந்த கடுகு தொடர்புடைய பொருட்கள் இருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், எந்த உணவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உணவு ஆர்டர் செய்யும் முன் தாங்கள் உண்ணும் உணவில் கடுகு தொடர்பான பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், ஒவ்வாமை உடையோர் அவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனமான FGS Ingredients Ltd என்னும் நிறுவனம், கடுகு தொடர்பான பொருட்கள் உள்ள உணவுகளை அகற்றுமாறு தங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரு ஆஸ்திரேலிய தாவரவியல் பூங்காக்கள்

New York Times பத்திரிகையின்படி, Cranbourne-இல் உள்ள Royal Botanic பூங்காவும், சிட்னியின் oyal Botanic பூங்காவும் உலகின் 25 சிறந்த இடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்தத்...

தலைமையிலிருந்து விலகினார் பசுமைக் கட்சித் தலைவர் Adam Bandt

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சியின் தலைவரான Adam Bandt, கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மெல்பேர்ண் தொகுதியில் தொழிற்கட்சியின் Sarah Witty-இடம் தோல்வியடைந்த பிறகு, தனது 15 ஆண்டுகால...