Newsபிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

-

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள், கடுகு, கடுகுப்பொடி கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.

அவற்றில் வேர்க்கடலையும் கலந்திருக்கலாம் என்றும், அவற்றை உண்பவர்களுக்கு அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

அவ்வகையில், கடுகுப்பொடி போன்ற பொருட்கள் உள்ள சாண்ட்விச்கள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு ஒன்றில் இந்த கடுகு தொடர்புடைய பொருட்கள் இருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், எந்த உணவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உணவு ஆர்டர் செய்யும் முன் தாங்கள் உண்ணும் உணவில் கடுகு தொடர்பான பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், ஒவ்வாமை உடையோர் அவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனமான FGS Ingredients Ltd என்னும் நிறுவனம், கடுகு தொடர்பான பொருட்கள் உள்ள உணவுகளை அகற்றுமாறு தங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...