Newsபிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

-

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள், கடுகு, கடுகுப்பொடி கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.

அவற்றில் வேர்க்கடலையும் கலந்திருக்கலாம் என்றும், அவற்றை உண்பவர்களுக்கு அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

அவ்வகையில், கடுகுப்பொடி போன்ற பொருட்கள் உள்ள சாண்ட்விச்கள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு ஒன்றில் இந்த கடுகு தொடர்புடைய பொருட்கள் இருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், எந்த உணவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உணவு ஆர்டர் செய்யும் முன் தாங்கள் உண்ணும் உணவில் கடுகு தொடர்பான பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், ஒவ்வாமை உடையோர் அவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனமான FGS Ingredients Ltd என்னும் நிறுவனம், கடுகு தொடர்பான பொருட்கள் உள்ள உணவுகளை அகற்றுமாறு தங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...