Newsஎலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

-

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம் திகதியில் இரண்டு நபா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளார்.

டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம், எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை சிலர் ஏன் கொல்ல விரும்புகிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், “யாரும் பைடன் அல்லது கமலாவைக் கொல்ல முயற்சிக்கவில்லையா?’’ என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த இடுகையினுடன் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனின் பெயர்களையும் மேற்கோள்காட்டி இருந்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பல்வேறான பயனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கியும் விட்டார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதியை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest news

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான...

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

டயர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கோகைன் கண்டுபிடிப்பு

கார் டயர்களில் மறைத்து வைத்து 18 மில்லியன் டாலர் மதிப்புள்ள 56 கிலோகிராம் கோகைனை இறக்குமதி செய்ய முயன்ற தம்பதியினருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை...

மெல்பேர்ணில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. Monash தனிவழிப்பாதையில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து...