Newsஎலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

-

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம் திகதியில் இரண்டு நபா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளார்.

டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம், எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை சிலர் ஏன் கொல்ல விரும்புகிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், “யாரும் பைடன் அல்லது கமலாவைக் கொல்ல முயற்சிக்கவில்லையா?’’ என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த இடுகையினுடன் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனின் பெயர்களையும் மேற்கோள்காட்டி இருந்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பல்வேறான பயனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கியும் விட்டார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதியை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...