Newsயாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை - இலங்கை ஜனாதிபதி...

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

-

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16,688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் 645 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வன்னியில் சஜித் பிரேமதாச மொத்தமாக 95,422 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

52,573 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டாம் இடத்திலும், 36,377 வாக்குகளைப் பெற்றுள்ள பி. அரியநேரத்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வன்னியில் அனுரகுமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும், நாமல் ராஜபக்ச 1,079 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தின் முழுமையான வாக்கு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி காலி மாவட்டத்தில் 3 இலட்சத்து 66,721 வாக்குகளைப் பெற்று அனுரகுமார திஸாநாயக்க அங்கு முன்னிலை வகிக்கிறார்.

சஜித் பிரேமதாச காலியில் 1 இலட்சத்து 89, 555 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சத்து 7,336 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...