Newsவரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

-

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி குறித்த பகுதியை அழித்த பயங்கரமான நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் வாஜிமா மற்றும் சுஸு நகரங்கள், சனிக்கிழமையன்று தொடங்கி உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 03:00 GMT வரை நீடித்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகள் பெருக்கெடுத்தமையினால், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திங்களன்று (23) சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமையன்று இஷிகாவாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

திங்கள்கிழமை (23) நண்பகல் வரை தொடர் மழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி மாதம் 7.5 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து இப்பகுதி இன்னும் மீண்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 236 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். காஸாவின் பின்லேடன் என...

NSW செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலைநிறுத்தம்!

நியூ சவுத் வேல்ஸில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் 15 சதவீத ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் நாளை ஒத்திவைக்கப்படும். செவிலியர்கள் மற்றும்...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...

அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி வழங்குவதை நிராகரித்த விக்டோரியா அரசு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை 20ல் இருந்து 22.5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை விக்டோரியா மாநில அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...

அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி வழங்குவதை நிராகரித்த விக்டோரியா அரசு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை 20ல் இருந்து 22.5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை விக்டோரியா மாநில அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா...