Newsவரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

-

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி குறித்த பகுதியை அழித்த பயங்கரமான நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் வாஜிமா மற்றும் சுஸு நகரங்கள், சனிக்கிழமையன்று தொடங்கி உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 03:00 GMT வரை நீடித்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகள் பெருக்கெடுத்தமையினால், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திங்களன்று (23) சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமையன்று இஷிகாவாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

திங்கள்கிழமை (23) நண்பகல் வரை தொடர் மழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி மாதம் 7.5 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து இப்பகுதி இன்னும் மீண்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 236 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...