Newsநுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

நுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

-

Woolworths மற்றும் Coles பலதரப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிலையாக இருப்பதும், பின்னர் பல்பொருள் அங்காடிகள் அந்த பொருட்களின் விலைகளை குறைந்தது 15 சதவீதத்தால் உயர்த்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் அதே விலையில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Woolworths பல்பொருள் அங்காடியில் “Prises Droped” என்ற இடத்திலும், Colse இல் உள்ள “Down Down” என்ற பகுதியிலும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர், பல்பொருள் அங்காடிகள் தள்ளுபடி என்ற போர்வையில் பல பொருட்களை விற்பனை செய்து மில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளன.

சமூக ஊடகங்கள் ஊடாக நுகர்வோர் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக நுகர்வோர் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அதன்படி, செப்டம்பர் 2021 முதல் மே 2023 வரையிலான 20 மாதங்களில் வெவ்வேறு நேரங்களில் 266 Woolworths தயாரிப்புகள் மீது நுகர்வோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது, Woolworths மற்றும் Coles ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டங்களை மீறியது தெரியவந்துள்ளது.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...