Newsநுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

நுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

-

Woolworths மற்றும் Coles பலதரப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிலையாக இருப்பதும், பின்னர் பல்பொருள் அங்காடிகள் அந்த பொருட்களின் விலைகளை குறைந்தது 15 சதவீதத்தால் உயர்த்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் அதே விலையில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Woolworths பல்பொருள் அங்காடியில் “Prises Droped” என்ற இடத்திலும், Colse இல் உள்ள “Down Down” என்ற பகுதியிலும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர், பல்பொருள் அங்காடிகள் தள்ளுபடி என்ற போர்வையில் பல பொருட்களை விற்பனை செய்து மில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளன.

சமூக ஊடகங்கள் ஊடாக நுகர்வோர் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக நுகர்வோர் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அதன்படி, செப்டம்பர் 2021 முதல் மே 2023 வரையிலான 20 மாதங்களில் வெவ்வேறு நேரங்களில் 266 Woolworths தயாரிப்புகள் மீது நுகர்வோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது, Woolworths மற்றும் Coles ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டங்களை மீறியது தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...