Newsநுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

நுகர்வோரை ஏமாற்றும் Woolworths மற்றும் Coles

-

Woolworths மற்றும் Coles பலதரப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிலையாக இருப்பதும், பின்னர் பல்பொருள் அங்காடிகள் அந்த பொருட்களின் விலைகளை குறைந்தது 15 சதவீதத்தால் உயர்த்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் அதே விலையில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Woolworths பல்பொருள் அங்காடியில் “Prises Droped” என்ற இடத்திலும், Colse இல் உள்ள “Down Down” என்ற பகுதியிலும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர், பல்பொருள் அங்காடிகள் தள்ளுபடி என்ற போர்வையில் பல பொருட்களை விற்பனை செய்து மில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளன.

சமூக ஊடகங்கள் ஊடாக நுகர்வோர் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக நுகர்வோர் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அதன்படி, செப்டம்பர் 2021 முதல் மே 2023 வரையிலான 20 மாதங்களில் வெவ்வேறு நேரங்களில் 266 Woolworths தயாரிப்புகள் மீது நுகர்வோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது, Woolworths மற்றும் Coles ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டங்களை மீறியது தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...