Newsகாதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

காதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

-

தனது காதலியைக் கொலை செய்து வீட்டில் புதைத்த காதலனை 16 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென் கொரியாவில் ஆண் ஒருவர் தனது காதலியைக் கொன்று, அவரது உடலை தனது வீட்டிலேயே புதைத்து வைத்திருந்தமை 16 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபருக்கு அப்போது 34 வயது என்பதுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதெனவும் தெரியவந்துள்ளது.

தற்போது 50 வயதாகும் சந்தேக நபர், தென்கொரியாவிலுள்ள ஜியோஜியில் உள்ள வாடகைக் குடியிருப்பில் தனது காதலியுடனான வாக்குவாதத்தில் அந்த பெண்ணை தலையில் தாக்கி கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை சூட்கேஸ{க்குள் வைத்து கட்டிடத்தின் மேற்கூரையை ஒட்டிய வெளிப்புற பால்கனியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் குறித்த பகுதியை செங்கற்களால் அடைத்து, அதன் மீது சிமெண்டை பூசி மறைத்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின் படி, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதே குடியிருப்புப் பிரிவில் தொடர்ந்து வசித்து வந்ததுடன், 2016இல் வெளியேறியுள்ளார்.

சந்தேக நபர் வெளியேறிய பிறகு, வேறு எந்த குத்தகைதாரர்களும் குறித்த குடியிருப்பில் வசிக்கவில்லை என்பதுடன், வீட்டின் உரிமையாளர் அதை சேமிப்புப் பகுதியாகப் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டிடத்தின் உரிமையாளர் தண்ணீர் கசிவைத் தடுக்க குறித்த பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது சடலம் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினருடன் அதிகமாக தொடர்பில்லாமல் இருந்தது தெரியவந்தது, அதாவது 2008இல் அவர் இறந்து மூன்று ஆண்டுகள் வரை காணாமல் போனவர் குறித்த முறைப்பாடு எதுவும் அவர்களால் தாக்கல் செய்யப்படவில்லை. 2011ஆம் ஆண்டிலேயே காணாமல் போன பெண் குறித்த முறைப்பாட்டை பெண்ணின் பெற்றோர் பதிவுவசெய்துள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தம்பதியினர் பிரிந்ததாகக் கூறினார். சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்; வழக்கை மீண்டும் விசாரித்தனர். 2011இல் பெண் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் மூலம், தலையில் பலத்த காயத்தால் அந்தப் பெண் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஜியோங்சாங் மாகாணத்தில் உள்ள சந்தேகநபரின் இல்லத்தில் கொலைக் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைதுசெய்தனர். விசாரணையில் சந்தேக நபர் தனது காதலியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்னர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், கைதுசெய்யப்படும்போதும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...

நாடாளுமன்றக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விக்டோரியன் பிரதமரும் தற்போதைய பிரதமரும்

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விக்டோரியன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ்...

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டி இனி தானாக நின்றுவிடும்!

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டிகளை தானாகவே பூட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிதிவண்டிகளை மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான...

செல்ஃபி எடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர்

செல்ஃபி எடுக்க மறுத்ததற்காக தனது மனைவியை கொடூரமாக தாக்கிய மருத்துவ கணவர் குறித்து அமெரிக்காவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. மலையேற்றப் பயணத்தின் போது அவர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளார். மருத்துவர்...

NSW-வில் அலைச்சறுக்கல் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளுக்கு அலைச்சறுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டாஸ்மன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை...