Newsகாதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

காதலியைக் கொன்று வீட்டில் புதைத்த காதலன்!

-

தனது காதலியைக் கொலை செய்து வீட்டில் புதைத்த காதலனை 16 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென் கொரியாவில் ஆண் ஒருவர் தனது காதலியைக் கொன்று, அவரது உடலை தனது வீட்டிலேயே புதைத்து வைத்திருந்தமை 16 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபருக்கு அப்போது 34 வயது என்பதுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதெனவும் தெரியவந்துள்ளது.

தற்போது 50 வயதாகும் சந்தேக நபர், தென்கொரியாவிலுள்ள ஜியோஜியில் உள்ள வாடகைக் குடியிருப்பில் தனது காதலியுடனான வாக்குவாதத்தில் அந்த பெண்ணை தலையில் தாக்கி கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை சூட்கேஸ{க்குள் வைத்து கட்டிடத்தின் மேற்கூரையை ஒட்டிய வெளிப்புற பால்கனியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் குறித்த பகுதியை செங்கற்களால் அடைத்து, அதன் மீது சிமெண்டை பூசி மறைத்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின் படி, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதே குடியிருப்புப் பிரிவில் தொடர்ந்து வசித்து வந்ததுடன், 2016இல் வெளியேறியுள்ளார்.

சந்தேக நபர் வெளியேறிய பிறகு, வேறு எந்த குத்தகைதாரர்களும் குறித்த குடியிருப்பில் வசிக்கவில்லை என்பதுடன், வீட்டின் உரிமையாளர் அதை சேமிப்புப் பகுதியாகப் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டிடத்தின் உரிமையாளர் தண்ணீர் கசிவைத் தடுக்க குறித்த பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது சடலம் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினருடன் அதிகமாக தொடர்பில்லாமல் இருந்தது தெரியவந்தது, அதாவது 2008இல் அவர் இறந்து மூன்று ஆண்டுகள் வரை காணாமல் போனவர் குறித்த முறைப்பாடு எதுவும் அவர்களால் தாக்கல் செய்யப்படவில்லை. 2011ஆம் ஆண்டிலேயே காணாமல் போன பெண் குறித்த முறைப்பாட்டை பெண்ணின் பெற்றோர் பதிவுவசெய்துள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தம்பதியினர் பிரிந்ததாகக் கூறினார். சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்; வழக்கை மீண்டும் விசாரித்தனர். 2011இல் பெண் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் மூலம், தலையில் பலத்த காயத்தால் அந்தப் பெண் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஜியோங்சாங் மாகாணத்தில் உள்ள சந்தேகநபரின் இல்லத்தில் கொலைக் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைதுசெய்தனர். விசாரணையில் சந்தேக நபர் தனது காதலியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்னர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், கைதுசெய்யப்படும்போதும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...