Newsஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

ஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

-

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.

இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...