Newsமனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

-

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர் இவர் டுபாயில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் ஐ திருமணம் செய்துள்ளார். இருவரும் டுபாயில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக்கில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரின் இணையதள வீடியோக்கள் மூலம் அவரின் ஆடம்பர வாழ்க்கையை பிரபலபடுத்தி வருகிறார். உதாரணமாக வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டங்கள், ஆடம்பரமான இரவு உணவுகள், டிசைனர் பொட்டிக்குகளில் ஷொப்பிங் செய்தல் போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சௌடி மிகவும் பிரபலம்.

மேலும், இந்த ஜோடி 10 லட்சம் டொலர்களுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியது, 20 லட்சம் டொலர்களுக்கு ஓவியம் வாங்கியது உள்ளிட்ட வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த வீடியோ 24 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...