Newsஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு இன்று முதல் இலவச விசா வழங்கும்...

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு இன்று முதல் இலவச விசா வழங்கும் இலங்கை

-

அவுஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு இன்று (ஒக்டோபர் 01) முதல் விசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த அனுமதியை 06 மாத காலத்திற்கு அந்தந்த நாடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா சலுகை கிடைக்கும்.

மேலும், சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் விசா இன்றி இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய அண்டை நாடுகளுடன் போட்டித்தன்மை கொண்ட சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புதல் மற்றும் 2024 ஆம் ஆண்டளவில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை எட்டுவதற்கான நோக்கத்துடன் இலவச விசா சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா சேவையை நிர்வகிப்பதில் இலங்கை சிக்கல்களை எதிர்கொண்டது மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா முறை இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டதையடுத்து, பழைய விசா முறையே ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...