Cinemaமீண்டும் ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா ஜெயம் ரவி?

மீண்டும் ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா ஜெயம் ரவி?

-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்தில் இருந்தே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெயம் ரவி சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் நாயகனாக மாறிய பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகமே பார்த்து பொறாமை படும் வகையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மிகவும் அன்பான கணவன் – மனைவியாக வாழ்ந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். கடந்த ஆண்டு வரை இருவருமே ஒற்றுமையான ஜோடிகளாக இருந்த நிலையில், திடீரென இவர்கள் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது.

ஆர்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி… அவர் மீதான கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்தார். மேலும் இந்த முடிவு குடும்ப நலன் கருதி எடுத்திருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குடும்ப சூழ்நிலைக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், தனிப்பட்ட முடிவு என்றும் ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். மேலும் ரவியின் இந்த முடிவால் தானும் தன்னுடைய குழந்தைகளும் எதுவும் தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், தன்னுடைய கணவரை சந்தித்து பேச பலமுறை முயற்சி செய்தும், தான் தடுக்க பட்டதாக ஆர்த்தி இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல் மன வேதனையில் இருந்தாலும், பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே விரும்புவதாகவும்… ஆனால் தன்னுடைய நடத்தை மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியாகும் தகவல்களை மறுப்பது தன்னுடைய கடமையாகும் என்றும், இது போன்ற தகவல்கள் தன்னுடைய குழந்தைகளை காயப்படுத்துவதை தன்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கூறி இருந்த ஆர்த்தி, இந்த கடுமையான காலகட்டத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என உருக்கமாக கூறி இருந்தார்.

ஆர்த்தியின், இந்த அறிக்கையை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா இடையே தொடர்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதுபோன்ற தகவல்களை பிரதர் பட விழாவில் கலந்து கொண்ட போது ஜெயம் ரவி மறுத்தார். கெனிஷா தரப்பில் இருந்தும், இது ஆதாரமற்ற தகவல் என்றும், ஒருவரின் குடும்ப வாழ்க்கையில் என்னை இழுக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

மேலும் விவாகரத்து சர்ச்சை பற்றி, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி ஆர்த்தியால் வேலைக்காரர்கள் முன்பு அசிங்கப்படுத்த பட்டதாகவும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தன்னுடைய கை செலவுக்கு கூட ஆர்த்தியிடம் கையேந்தும் நிலையில்தான் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். மேலும் தனக்கென ஒரு பேங்க் பாஸ் புக் கூட இல்லை. நான் சம்பாதித்த பணம் அனைத்தும், ஆர்த்தி மற்றும் மாமியாரிடம் தான் உள்ளது என கூறினார். அதே போல் ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக நீலாங்கரை காவல்நிலையத்தில் ஜெயம் ரவி கொடுத்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில்… தற்போது ஆர்த்தி சமாதான கொடி காட்டும் விதத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆர்த்தியின் இந்த அறிக்கையில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். நான் தனிப்பட்ட பேச்சுவாந்தாரிக்கு தயார் என்றேன். ஆனால் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்பது போன்றும். சட்ட ரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு, என் மௌனம் வெளிப்பாடாக இருப்பது… என்னுடைய பலவீனமோ, அல்ல குற்ற உணர்ச்சியோ அல்ல. என்னுடைய சுயமரியாதையை கடைபிடிக்கிறேன். உண்மையை மறைக்க விரும்பி, என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மெளனமாக இருக்கிறேன். அதே நேரம் நீதித் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒருமனதாக விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன் என ஆர்த்தி எமோஷ்னலாக பேசியுள்ளார். ஆர்த்தி மீண்டும் ஜெயம் ரவிக்கு சமாதான கொடி காட்டியுள்ளதால், பிள்ளைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...