Newsஅகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

-

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகே செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து புலம் பெயா்வோா் நலனுக்கான ஐ.நா. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 போ் உயிரிழந்தனா்.

310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது. விபத்துப் பகுதியிலிருந்து 32 போ் மீட்கப்பட்டனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோா் ஆங்கா் கடற்கரைக்கு 150 மீட்டா் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் படகிலிருந்த 115 பேரை மீட்டுள்ளோம். எஞ்சியவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெறுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனா்.

அவா்களை அகதிகள் கடத்தல்காரா்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோா் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...