Newsஅகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

-

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகே செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து புலம் பெயா்வோா் நலனுக்கான ஐ.நா. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 போ் உயிரிழந்தனா்.

310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது. விபத்துப் பகுதியிலிருந்து 32 போ் மீட்கப்பட்டனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோா் ஆங்கா் கடற்கரைக்கு 150 மீட்டா் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் படகிலிருந்த 115 பேரை மீட்டுள்ளோம். எஞ்சியவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெறுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனா்.

அவா்களை அகதிகள் கடத்தல்காரா்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோா் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...