Melbourneமெல்பேர்ணில் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்...

மெல்பேர்ணில் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

-

மெல்பேர்ணின் கரோலின் ஸ்பிரிங்ஸில் உள்ள ஹில்சைட் பகுதியில் கத்தியால் குத்திய ஒரு நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசார் வரும்போது பலத்த காயங்களுடன் வீட்டின் முன் படுத்திருந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கையில் கத்தியுடன் பொலிஸாரிடம் வந்த நிலையில், பொலிஸாரின் உத்தரவை மதிக்காத காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுமார் 30 வயதுடைய சந்தேக நபர் ஆபத்தான நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் மெல்பேர்ண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர் பொலிஸாரால் சுடப்பட்ட நபரின் மாற்றாந்தந்தை என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் சந்தேக நபர்கள் எவரும் இல்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...