Newsகோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

கோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

-

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு இந்த கூற்று மீது நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை இருக்காது. மரண வாயிலின் மிக அருகே சென்று மீண்டு வந்த அனுபவம் உள்ள சிலர் சுயநினைவு இன்றி இருந்தபோது தாங்கள் சொர்க்கத்தை அடைந்துவிட்டதை போல உணர்ந்ததாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

இந்த நிலையில் கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்களைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோமா நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ஞாபக மறதி இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறுவது மிகவும் பொதுவானது. ஆனால் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்குச் சென்று திரும்பியதாகக் கூறுவது மிகவும் வினோதமானது அதுவும் அங்கு வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாக கூறினால் எப்படி இருக்கும்??!!

இப்படி கூறுவது ஒரு சாதாரண நபர் அல்ல, பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது தான் இங்கே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர்.எபன் அலெக்ஸாண்டர், E coli தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுயநினைவின்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

பிறகு ஒருவழியாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் கூறி இருக்கும் தகவல்தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. தான் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்கு சென்றதாகக் கூறியுள்ள அலெக்ஸாண்டர் அங்கு மேகங்களை கண்டதாகவும், மிகவும் விசித்திரமாக தான் வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சொர்க்கம் சென்றது குறித்து மேலும் விவரித்த மருத்துவர், மேகங்களால் சூழப்பட்ட வேறு பரிமாணத்தை அடைந்ததாகவும், மேகங்களுக்கு மத்தியில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி மற்றும் பசுமையால் தான் சூழப்பட்டிருந்ததாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் பார்த்து அனுபவித்தபோது தான் ஒரு கம்பளத்தின் மீது பறந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு பசுமை நிறைந்த மைதானத்தை கண்டதாகவும், தவிர வானத்திலிருந்து இசைக்கப்படும் பாடல்களை கேட்க முடிந்ததாகவும் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் மருத்துவர் அலெக்ஸ்சாண்டர். கோமாவின்போது தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்கள் அனைத்தும் ஏதோ விவரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதை போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவரின் மூளை முற்றிலும் செயலிழந்ததால், உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கு இல்லாமல், மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ஆனால் அவரோ கோமாவில் இருந்து மீண்டதோடு மேற்கண்ட அனுபவங்களை தெளிவாக அனுபவித்ததாகவும் மற்றும் சொர்க்கத்தில் ஒரு அழகான பெண்ணை சந்தித்ததாகவும் கூறி உள்ளார்.

கோமாவில் இருந்து எழுந்தவுடன், டொக்டர் அலெக்சாண்டர் முழுமையாக குணமடைய எட்டு வாரங்கள் ஆனது. அவர் குணமடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, உறவினர் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மருத்துவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒரு சகோதரி இருப்பதை உறவினர் வெளிப்படுத்தினார். தான் சொர்க்கத்தில் பார்த்த அழகான பெண், தனது சகோதரி என்பதை பின்னர் உணர்ந்ததாக அலெக்ஸாண்டர் கூறி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...