Newsகோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

கோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

-

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு இந்த கூற்று மீது நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை இருக்காது. மரண வாயிலின் மிக அருகே சென்று மீண்டு வந்த அனுபவம் உள்ள சிலர் சுயநினைவு இன்றி இருந்தபோது தாங்கள் சொர்க்கத்தை அடைந்துவிட்டதை போல உணர்ந்ததாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

இந்த நிலையில் கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்களைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோமா நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ஞாபக மறதி இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறுவது மிகவும் பொதுவானது. ஆனால் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்குச் சென்று திரும்பியதாகக் கூறுவது மிகவும் வினோதமானது அதுவும் அங்கு வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாக கூறினால் எப்படி இருக்கும்??!!

இப்படி கூறுவது ஒரு சாதாரண நபர் அல்ல, பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது தான் இங்கே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர்.எபன் அலெக்ஸாண்டர், E coli தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுயநினைவின்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

பிறகு ஒருவழியாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் கூறி இருக்கும் தகவல்தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. தான் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்கு சென்றதாகக் கூறியுள்ள அலெக்ஸாண்டர் அங்கு மேகங்களை கண்டதாகவும், மிகவும் விசித்திரமாக தான் வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சொர்க்கம் சென்றது குறித்து மேலும் விவரித்த மருத்துவர், மேகங்களால் சூழப்பட்ட வேறு பரிமாணத்தை அடைந்ததாகவும், மேகங்களுக்கு மத்தியில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி மற்றும் பசுமையால் தான் சூழப்பட்டிருந்ததாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் பார்த்து அனுபவித்தபோது தான் ஒரு கம்பளத்தின் மீது பறந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு பசுமை நிறைந்த மைதானத்தை கண்டதாகவும், தவிர வானத்திலிருந்து இசைக்கப்படும் பாடல்களை கேட்க முடிந்ததாகவும் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் மருத்துவர் அலெக்ஸ்சாண்டர். கோமாவின்போது தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்கள் அனைத்தும் ஏதோ விவரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதை போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவரின் மூளை முற்றிலும் செயலிழந்ததால், உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கு இல்லாமல், மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ஆனால் அவரோ கோமாவில் இருந்து மீண்டதோடு மேற்கண்ட அனுபவங்களை தெளிவாக அனுபவித்ததாகவும் மற்றும் சொர்க்கத்தில் ஒரு அழகான பெண்ணை சந்தித்ததாகவும் கூறி உள்ளார்.

கோமாவில் இருந்து எழுந்தவுடன், டொக்டர் அலெக்சாண்டர் முழுமையாக குணமடைய எட்டு வாரங்கள் ஆனது. அவர் குணமடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, உறவினர் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மருத்துவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒரு சகோதரி இருப்பதை உறவினர் வெளிப்படுத்தினார். தான் சொர்க்கத்தில் பார்த்த அழகான பெண், தனது சகோதரி என்பதை பின்னர் உணர்ந்ததாக அலெக்ஸாண்டர் கூறி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...