Newsகோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

கோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

-

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு இந்த கூற்று மீது நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை இருக்காது. மரண வாயிலின் மிக அருகே சென்று மீண்டு வந்த அனுபவம் உள்ள சிலர் சுயநினைவு இன்றி இருந்தபோது தாங்கள் சொர்க்கத்தை அடைந்துவிட்டதை போல உணர்ந்ததாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

இந்த நிலையில் கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்களைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோமா நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ஞாபக மறதி இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறுவது மிகவும் பொதுவானது. ஆனால் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்குச் சென்று திரும்பியதாகக் கூறுவது மிகவும் வினோதமானது அதுவும் அங்கு வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாக கூறினால் எப்படி இருக்கும்??!!

இப்படி கூறுவது ஒரு சாதாரண நபர் அல்ல, பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது தான் இங்கே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர்.எபன் அலெக்ஸாண்டர், E coli தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுயநினைவின்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

பிறகு ஒருவழியாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் கூறி இருக்கும் தகவல்தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. தான் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்கு சென்றதாகக் கூறியுள்ள அலெக்ஸாண்டர் அங்கு மேகங்களை கண்டதாகவும், மிகவும் விசித்திரமாக தான் வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சொர்க்கம் சென்றது குறித்து மேலும் விவரித்த மருத்துவர், மேகங்களால் சூழப்பட்ட வேறு பரிமாணத்தை அடைந்ததாகவும், மேகங்களுக்கு மத்தியில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி மற்றும் பசுமையால் தான் சூழப்பட்டிருந்ததாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் பார்த்து அனுபவித்தபோது தான் ஒரு கம்பளத்தின் மீது பறந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு பசுமை நிறைந்த மைதானத்தை கண்டதாகவும், தவிர வானத்திலிருந்து இசைக்கப்படும் பாடல்களை கேட்க முடிந்ததாகவும் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் மருத்துவர் அலெக்ஸ்சாண்டர். கோமாவின்போது தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்கள் அனைத்தும் ஏதோ விவரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதை போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவரின் மூளை முற்றிலும் செயலிழந்ததால், உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கு இல்லாமல், மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ஆனால் அவரோ கோமாவில் இருந்து மீண்டதோடு மேற்கண்ட அனுபவங்களை தெளிவாக அனுபவித்ததாகவும் மற்றும் சொர்க்கத்தில் ஒரு அழகான பெண்ணை சந்தித்ததாகவும் கூறி உள்ளார்.

கோமாவில் இருந்து எழுந்தவுடன், டொக்டர் அலெக்சாண்டர் முழுமையாக குணமடைய எட்டு வாரங்கள் ஆனது. அவர் குணமடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, உறவினர் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மருத்துவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒரு சகோதரி இருப்பதை உறவினர் வெளிப்படுத்தினார். தான் சொர்க்கத்தில் பார்த்த அழகான பெண், தனது சகோதரி என்பதை பின்னர் உணர்ந்ததாக அலெக்ஸாண்டர் கூறி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...