Newsகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

-

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உட்பட குடும்ப உறவினர்கள் 13 பேரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பெண் குடும்பத்தில் இருந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண்ணை விசாரித்த போது, தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்த காரணத்தால் அதிக கோபம் ஏற்பட்ட நிலையில், ரொட்டி சமைக்கும் கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார்.

இதனை அறியாமல் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கோதுமை மாவில் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த குற்றத்திற்காக இளம்பெண்ணை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...