Newsகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

-

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உட்பட குடும்ப உறவினர்கள் 13 பேரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பெண் குடும்பத்தில் இருந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண்ணை விசாரித்த போது, தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்த காரணத்தால் அதிக கோபம் ஏற்பட்ட நிலையில், ரொட்டி சமைக்கும் கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார்.

இதனை அறியாமல் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கோதுமை மாவில் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த குற்றத்திற்காக இளம்பெண்ணை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...