Newsகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழுக் குடும்பத்திற்கும் எமனாக மாறிய இளம்பெண்

-

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உட்பட குடும்ப உறவினர்கள் 13 பேரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பெண் குடும்பத்தில் இருந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண்ணை விசாரித்த போது, தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்த காரணத்தால் அதிக கோபம் ஏற்பட்ட நிலையில், ரொட்டி சமைக்கும் கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார்.

இதனை அறியாமல் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கோதுமை மாவில் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த குற்றத்திற்காக இளம்பெண்ணை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...