Uncategorizedஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R...

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R ரஹ்மான் இசைக் கச்சேரி

-

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஒஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் நேரடியான இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அடுத்தமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், நிகழ்ச்சியில் A R ரஹ்மான், கமலா ஹரிஸ் கலந்து கொள்வார்கள் என்றும் உலகத் தரமான இசைக் கச்சேரி நேரடியாக உங்கள் வீடுகளுக்கே ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இசைக் கச்சேரி குறித்து A R ரஹ்மான் தனது சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் பகிரவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அமெரிக்கர் மத்தியில் கமலா ஹரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...