Newsஅனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கினால் சிறைத்தண்டனை

அனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கினால் சிறைத்தண்டனை

-

அனுமதியின்றி குடிவரவு ஆலோசனைகளை வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் மோசடியாளர்களை தண்டிக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உரிமம் இல்லாமல் குடிவரவு ஆலோசனை வழங்குவோருக்கு 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கு 1,600 நியூசிலாந்து டாலர்கள் அபராதம் விதிக்க ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுமதியின்றி குடியேற்ற அறிவுரை வழங்கிய நியூசிலாந்து நாட்டவர்கள் 3 பேர் இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் நியூசிலாந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குடியேற்றவாசிகளை குறிவைத்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் நியூசிலாந்து வீசாவைப் பெறுவதற்காக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும், குடிவரவு அறிவுறுத்தல்களுக்கு முரணாக சட்டவிரோதமாக தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து சந்தேகநபர்கள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றதுடன் அதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான சட்ட அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...