Newsஉலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

-

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது.

பல்வேறு நாடுகளின் அரசுகள் சொந்தமாக நிதிகளை உருவாக்கி, அவற்றை பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும். இந்த நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் குளோபல் எஸ்.டபிள்யு.எப். சார்பாக உலகிலேயே பணக்கார நகரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு மாத நிலவரப்படி, அபு தாபி அரசு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டு நிதிகளைப் பெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அபுதாபி அரசைப் பொருத்தவரை, எமிரேட்ஸ் முதலீட்டு ஆணைய நிதி மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக, அபு தாபி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...