Newsஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

-

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57).

தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்றும், எட்டு மாதங்கள் தன்னை மறைத்துவைத்திருந்த கமீலா பின்னர் தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும் சைமன் கூறிவருகிறார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது மரணப்படுக்கையில் இந்த ரகசியத்தைத் தன்னிடம் கூறியதாக சைமன் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லசின் அவுஸ்திரேலிய பயணம் குறித்த அறிவுப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் சிட்னிக்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சைமன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மன்னர் நான் வாழும் இடத்துக்கு வரும்போது நானே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் சைமன்.

ஏற்கனவே, தான் மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியரின் மகன் என்பதை நிரூபிக்க DNA சோதனை நடத்தவேண்டும் என சைமன் கோரியுள்ள நிலையில், அவர் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து, தான் அவர்களுடைய பிள்ளை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்ய வற்புறுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

ஆகவே, சைமனால் மன்னருக்கு ஏதாவது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படலாம் என்பதால், சைமன் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

NSW-வில் எரிவாயு குழாய் வெடிப்பு – இரு பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

நியூ சவுத் வேல்ஸில் எரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள Harris சாலை அருகே தொழிலாளர்கள் பழுதுபார்க்கும்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

சிட்னி நீர்வழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 21 நச்சு இரசாயனங்கள்

சிட்னியின் நீர்வழிகளில் 21 புதிய நிரந்தர இரசாயனங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Polyfluoroalkyl பொருட்கள் (PFAS) நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை...