Newsஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

-

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57).

தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்றும், எட்டு மாதங்கள் தன்னை மறைத்துவைத்திருந்த கமீலா பின்னர் தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும் சைமன் கூறிவருகிறார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது மரணப்படுக்கையில் இந்த ரகசியத்தைத் தன்னிடம் கூறியதாக சைமன் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லசின் அவுஸ்திரேலிய பயணம் குறித்த அறிவுப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் சிட்னிக்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சைமன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மன்னர் நான் வாழும் இடத்துக்கு வரும்போது நானே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் சைமன்.

ஏற்கனவே, தான் மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியரின் மகன் என்பதை நிரூபிக்க DNA சோதனை நடத்தவேண்டும் என சைமன் கோரியுள்ள நிலையில், அவர் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து, தான் அவர்களுடைய பிள்ளை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்ய வற்புறுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

ஆகவே, சைமனால் மன்னருக்கு ஏதாவது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படலாம் என்பதால், சைமன் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...