Newsஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

-

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57).

தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்றும், எட்டு மாதங்கள் தன்னை மறைத்துவைத்திருந்த கமீலா பின்னர் தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும் சைமன் கூறிவருகிறார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது மரணப்படுக்கையில் இந்த ரகசியத்தைத் தன்னிடம் கூறியதாக சைமன் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லசின் அவுஸ்திரேலிய பயணம் குறித்த அறிவுப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் சிட்னிக்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சைமன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மன்னர் நான் வாழும் இடத்துக்கு வரும்போது நானே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் சைமன்.

ஏற்கனவே, தான் மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியரின் மகன் என்பதை நிரூபிக்க DNA சோதனை நடத்தவேண்டும் என சைமன் கோரியுள்ள நிலையில், அவர் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து, தான் அவர்களுடைய பிள்ளை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்ய வற்புறுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

ஆகவே, சைமனால் மன்னருக்கு ஏதாவது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படலாம் என்பதால், சைமன் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான...

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

டயர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கோகைன் கண்டுபிடிப்பு

கார் டயர்களில் மறைத்து வைத்து 18 மில்லியன் டாலர் மதிப்புள்ள 56 கிலோகிராம் கோகைனை இறக்குமதி செய்ய முயன்ற தம்பதியினருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை...

மெல்பேர்ணில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. Monash தனிவழிப்பாதையில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து...