Breaking Newsபிரபலமான சிட்னி சுற்றுலா தளத்தில் ஒரு தாயும் இரு குழந்தைகளும் உயிரிழப்பு

பிரபலமான சிட்னி சுற்றுலா தளத்தில் ஒரு தாயும் இரு குழந்தைகளும் உயிரிழப்பு

-

சிட்னியின் ஜார்ஜஸ் ஆற்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 10.15 மணியளவில் இவர்கள் மூவரும் நீரில் விழுந்ததையடுத்து, பொலிசார் உள்ளிட்ட நிவாரண சேவைகள் மூவரையும் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் ஜோர்ஜஸ் ஆற்றில் தேடுதல் நடவடிக்கை சோகத்தில் முடிவடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடத்தில் இந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் தண்ணீரில் விழுந்தனர், அந்த இடத்தில் ஒரு குழுவினர் தண்ணீரில் குதித்து தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தேடினர்.

குறித்த பெண் முதலில் கரைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவசர சேவை தன்னார்வ தொண்டர்களும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மற்றும் குழந்தைகளின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...