Breaking Newsபிரபலமான சிட்னி சுற்றுலா தளத்தில் ஒரு தாயும் இரு குழந்தைகளும் உயிரிழப்பு

பிரபலமான சிட்னி சுற்றுலா தளத்தில் ஒரு தாயும் இரு குழந்தைகளும் உயிரிழப்பு

-

சிட்னியின் ஜார்ஜஸ் ஆற்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 10.15 மணியளவில் இவர்கள் மூவரும் நீரில் விழுந்ததையடுத்து, பொலிசார் உள்ளிட்ட நிவாரண சேவைகள் மூவரையும் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் ஜோர்ஜஸ் ஆற்றில் தேடுதல் நடவடிக்கை சோகத்தில் முடிவடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடத்தில் இந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் தண்ணீரில் விழுந்தனர், அந்த இடத்தில் ஒரு குழுவினர் தண்ணீரில் குதித்து தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தேடினர்.

குறித்த பெண் முதலில் கரைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவசர சேவை தன்னார்வ தொண்டர்களும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மற்றும் குழந்தைகளின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...