NewsColes மற்றும் Woolworths-இல் மீண்டும் காணப்படும் போலி தள்ளுபடிகள்

Coles மற்றும் Woolworths-இல் மீண்டும் காணப்படும் போலி தள்ளுபடிகள்

-

Coles மற்றும் Woolworths முழுவதும் ஆயிரக்கணக்கான போலி தள்ளுபடி தயாரிப்புகள் மீண்டும் காணப்படுகின்றன.

போலியான தள்ளுபடி பட்டியல்களில் பால் பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவு, சுகாதார கருவிகள், காபி, மருந்து, இனிப்புகள், காலை உணவு, சிற்றுண்டிகள், வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள், பாஸ்தா மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளும் அடங்கும்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவுஸ்திரேலிய நுகர்வோர் அதிகாரசபை இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமான போலியான தள்ளுபடிகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

67 சதவீத சில்லறை விற்பனையாளர்கள் தள்ளுபடி தருவதாக கூறி போலி தள்ளுபடியில் சிக்குவதாகவும், தினசரி மளிகை பொருட்களை வாங்கும் 39 சதவீத நுகர்வோர் போலியான தள்ளுபடி என்ற போர்வையில் பல்பொருள் அங்காடிகளால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளான Coles மற்றும் Woolworths-க்கு எதிராக ACCC பெடரல் நீதிமன்றத்தில் தலா ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது, தவறான தள்ளுபடி விலைகள் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும், ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Woolworths சூப்பர் மார்க்கெட் செப்டம்பர் 2021 மற்றும் மே 2023 க்கு இடையில் 20 மாதங்களில் 266 தயாரிப்புகளுக்கு போலி தள்ளுபடியை வழங்கியது, அதே நேரத்தில் பிப்ரவரி 2022 மற்றும் மே 2023 க்கு இடையில் 15 மாதங்களில் 245 தயாரிப்புகளுக்கு போலி தள்ளுபடியை Coles வழங்கியதாக கூறப்படுகிறது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...