Newsஇஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

-

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தனர். அதில் 2 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு ரொக்கெட் திறந்தவெளி பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே போல், டெல் அவிவ் நகரத்தின் மீதும், வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீதும் சுமார் 20 ரொக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான ரொக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. அதே சமயம், ஒரு குடியிருப்பு கட்டிடம் மற்றும் சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் உள்ள ஹைபா, கிலிலாட் பகுதிகளில் செயல்பட்டு வரும் மொசாட் தலைமையகம் மற்றும் சைபர் உளவுத்துறை பிரிவு ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...