Newsஅவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

-

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சால்ஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

மன்னர் தனது உரையினை நிறைவு செய்தபோது, அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுயாதீன பெண் செனட் சபை உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அவர் “நீங்கள் எனக்கு மன்னர் அல்ல” என சத்தமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரத்த குரலில் சுமார் ஒரு நிமிடம்வரை சத்தமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரை, நாடாளுமன்ற பாதுகாவலர்கள் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

பழங்குடி மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகத் தெரிவித்ததுடன், இது உங்கள் நாடு அல்ல எனவும், நீங்கள் எங்களுக்கு மன்னரும் இல்லை எனவும் கூச்சலிட்டுள்ளார்.

இதன் பின்னர் அரச தம்பதியர்களை வரவேற்க காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் பிரித்தானிய மன்னர் மற்றும் மகாராணி ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த நாடாக அவுஸ்திரேலியா திகழும் நிலையில், அதன் தலைவராகப் பிரித்தானிய மன்னரே பணியாற்றுகிறார்.

இருப்பினும், அந்த பதவியிலிருந்து மன்னரை நீக்குவது குறித்து அவுஸ்திரேலியாவில் அண்மைக் காலத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...