Newsவிக்டோரியாவில் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு வெளியான நற்செய்தி

விக்டோரியாவில் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு வெளியான நற்செய்தி

-

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு காவல் நிலையங்களுக்கு வெளியே உள்ள சிறப்பு மண்டலங்களில் இருந்து ஆன்லைனில் பொருட்களை விற்கவும் வாங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ணின் வடகிழக்கு பகுதியில் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பிறகு, பெருநகரங்கள் மற்றும் பிராந்திய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 35 காவல் நிலையங்களின் பாதுகாப்பின் கீழ் இந்த பாதுகாப்பான மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில், ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளில் திருட்டு மற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளதால், இந்த பாதுகாப்பான வர்த்தக மண்டலங்கள் விக்டோரியா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், தெளிவான பலகைகள், நல்ல வெளிச்சம் உள்ளிட்ட சிசிடிவி கேமரா அமைப்புகள் மூலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

இத்திட்டத்தின் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் திருட்டு, மோசடிகள் குறைவதாகவும், முன்பை விட விக்டோரியர்கள் ஆன்லைனில் பொருட்களை விற்கவும் வாங்கவும் தூண்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியாவில் இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் நிறுவப்பட்ட பகுதிகளில் Bacchus Marsh, Ballarat, Bendigo, Catlemaine, Corio, Echuca, Geelong, Horsham, Maryborough, Midura, Morwell, Swan, Hill மற்றும் Warrnambool ஆகியவை அடங்கும்.

மெல்பேர்ணைச் சுற்றி உருவாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வர்த்தக மண்டலங்களில் Altona, Brodmeadows, Dandenong, Fawkner, Melton, Moonee Ponds, Moorabbin, Mooroolbark, Pakenham, Prahran, Richmond, St Kilda மற்றும் Werribee ஆகியவை அடங்கும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...