Newsதனது வாக்கினை பதிவு செய்தார் ஜோ பைடன்

தனது வாக்கினை பதிவு செய்தார் ஜோ பைடன்

-

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார்.

தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...