News21,000 புலம்பெயர்ந்தோரை காவு வாங்கியுள்ள சவுதி பட்டத்து இளவரசரின் கனவு திட்டம்

21,000 புலம்பெயர்ந்தோரை காவு வாங்கியுள்ள சவுதி பட்டத்து இளவரசரின் கனவு திட்டம்

-

சவுதி பட்டத்து இளவரசரான முகம்மது பின் சல்மான், தன் நாட்டை உலக சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அவ்வகையில், Saudi Vision 2030 என்னும் ஒரு திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். NEOM என்னும் திட்டத்தின் கீழ், பாலைவனத்தில் ஒரு நீண்ட வரிசையில் The Line என்னும் ஸ்மார்ட் நகரத்தை உருவாக்குவதும் சல்மானின் கனவாகும்.

அவரது திட்டம் நன்றாக இருந்தாலும், அதனால் மனித உரிமை மீறல்கள் பல நடந்துவருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சல்மானின் கனவு நகரத்தை உருவாக்கும் முயற்சியில், இதுவரை, 8 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் பணியாளர்கள் மாயமாகியுள்ளதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 21,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ITV என்னும் ஊடகம் அதிரவைக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

ஒரு வெளிநாட்டுப் பணியாளரைப்போல ரகசியமாக சவுதிக்குச் சென்று அந்த பணியாளர்களை சந்தித்த Noura என்னும் ஊடகவியலாளர் இந்த அதிரவைக்கும் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

சவுதிக்கு வேலைக்குப் போனால் நல்ல ஊதியம் கிடைக்கும், குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என்னும் ஆசையில் சென்ற பணியாளர்கள் பலர் சவப்பெட்டியில் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு உதாரணமாக, ராஜூ என்னும் நேபாளப் பணியாளரைக் கூறலாம். சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாமல், வாரம் ஒன்றிற்கு 84 மணி நேரம் வர வேலை செய்து, ஊதியமும் கிடைக்காமல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் ராஜூ. ஒரு நாள் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்ட அவரை, கண்களில் கண்ணீரும் கோபமுமாக, தங்கள் கைகளில் சுமந்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள் அவரது சகப்பணியாளர்கள்.

தாங்கள் அடிமைகளைப்போல, பிச்சைக்காரர்களைப் போல நடத்தப்படுவதாகக் கூறி கண்ணீர் வடித்துள்ளார்கள் பலர். Noura என்னும் ஊடகவியலாளர் இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ள நிலையில், சவுதி போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்களின் அவல நிலையைக் காட்டும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...