Cinemaகங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

-

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் சிவா – நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவம்பர் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் இன்று காலை உயிரிழந்தார். 43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், உண்டா, ஒன், செளதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், நிஷாத் யூசூப் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கொச்சி பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், படத் தொகுப்பாளரும் தற்போது மரணமடைந்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அபர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...