Cinemaகங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

-

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் சிவா – நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவம்பர் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் இன்று காலை உயிரிழந்தார். 43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், உண்டா, ஒன், செளதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், நிஷாத் யூசூப் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கொச்சி பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், படத் தொகுப்பாளரும் தற்போது மரணமடைந்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அபர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...