Melbourneமெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை - ஒருவர் காயம்

மெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை – ஒருவர் காயம்

-

நேற்று காலை மெல்பேர்ண் மிடில் பார்க்கில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பல பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் வகையில், அப்போது அருகில் இருந்த மற்றுமொரு பெண் தலையிட்டு மோதலை அமைதிப்படுத்த முற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அந்த பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 36 வயதான பெண் பொலிஸாரிடம் கூறுகையில், காலை 6.30 மணியளவில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சந்தேக நபர் காரணமின்றி தாக்கியதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அவசர சேவை ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் 46 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மீது இரண்டு சட்ட விரோதமான தாக்குதல்கள் மற்றும் கடமையில் இருந்த அவசரகால பணியாளர் மீது பல தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறித்த பெண்ணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் மெல்பேர்ண் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...