Melbourneமெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை - ஒருவர் காயம்

மெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை – ஒருவர் காயம்

-

நேற்று காலை மெல்பேர்ண் மிடில் பார்க்கில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பல பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் வகையில், அப்போது அருகில் இருந்த மற்றுமொரு பெண் தலையிட்டு மோதலை அமைதிப்படுத்த முற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அந்த பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 36 வயதான பெண் பொலிஸாரிடம் கூறுகையில், காலை 6.30 மணியளவில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சந்தேக நபர் காரணமின்றி தாக்கியதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அவசர சேவை ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் 46 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மீது இரண்டு சட்ட விரோதமான தாக்குதல்கள் மற்றும் கடமையில் இருந்த அவசரகால பணியாளர் மீது பல தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறித்த பெண்ணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் மெல்பேர்ண் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...