Newsவிக்டோரியாவில் கைப்பற்றப்பட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைமருந்துகள்

விக்டோரியாவில் கைப்பற்றப்பட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைமருந்துகள்

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிராமியன்களிடம் இருந்து ஐஸ் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரசாயனப் பொருட்கள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த இரசாயனங்கள் மீதான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிராமியன் விம்மேரா பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி சுமார் 5 டன் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 10 டன்னுக்கும் அதிகமான இரசாயனங்கள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சிறிய அளவிலான போதைப் பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...