Newsஇலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

இலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

-

வடக்கு பிரதேச (NT) மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த ஆண்டின் சிறந்த அவுஸ்திரேலியர் விருதுக்கு இலங்கையர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கை இளைஞரான நிலேஷ் திலுஷன் என்பவருக்கே இந்த விருது வழங்கப்படவுள்ளது.

NT State Young Australian of the year விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

NT மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலியன் விருது 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுவதும், மாநிலத்தின் இளம் ஆஸ்திரேலியன் பிரிவில் நிலேஷ் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலேஷ் திலுஷன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவர்.

அவுஸ்திரேலியாவில் பல்வேறு பின்னணியில் உள்ள இளைஞர்களை அவர்களது சமூகத்திற்கு சேவை செய்ய ஊக்குவிப்பதிலும் ஒன்றிணைப்பதிலும் நிலேஷ் திலுஷன் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார்.

NT இல் பல்வேறு தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டுள்ள இளைஞரான இவர், FINSMART மற்றும் Jumpstart போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து புலம்பெயர்ந்த இளைஞர் சமூகத்திற்கு வேலை தேடுதல் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

குறிப்பாக மொழியினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி நிலேஷ் திலுஷன் இந்த ஆண்டு NT மாநிலத்தில் ஆண்டின் இளம் ஆஸ்திரேலியராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...