Newsஅவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன்...

அவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன் விடுவிப்பு

-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்களில் ஒருவர் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு Boxing தினத்தன்று 41 வயதான Emma Lovell என்ற பெண்மணி வீட்டை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

இந்நிலையில் சந்தேக நபரான மற்றொரு சிறுவன் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் கொலைக்கான தூண்டுதல் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் இந்த சிறுவன் தன்னுடைய கூட்டாளி கத்தி வைத்து இருந்ததை அறிந்து இருந்தானா என்பதற்கான என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று நீதிபதி விவரித்து இந்த தீர்ப்பினை வழங்கினார்.

இருப்பினும் எம்மா லவல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நடத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கான தண்டனை டிசம்பரில் விதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சிறுவன் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டதற்கு Emma Lovell-இன் கணவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...