Newsஅவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன்...

அவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன் விடுவிப்பு

-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்களில் ஒருவர் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு Boxing தினத்தன்று 41 வயதான Emma Lovell என்ற பெண்மணி வீட்டை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

இந்நிலையில் சந்தேக நபரான மற்றொரு சிறுவன் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் கொலைக்கான தூண்டுதல் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் இந்த சிறுவன் தன்னுடைய கூட்டாளி கத்தி வைத்து இருந்ததை அறிந்து இருந்தானா என்பதற்கான என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று நீதிபதி விவரித்து இந்த தீர்ப்பினை வழங்கினார்.

இருப்பினும் எம்மா லவல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நடத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கான தண்டனை டிசம்பரில் விதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சிறுவன் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டதற்கு Emma Lovell-இன் கணவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...