Newsஅவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன்...

அவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன் விடுவிப்பு

-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்களில் ஒருவர் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு Boxing தினத்தன்று 41 வயதான Emma Lovell என்ற பெண்மணி வீட்டை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

இந்நிலையில் சந்தேக நபரான மற்றொரு சிறுவன் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் கொலைக்கான தூண்டுதல் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் இந்த சிறுவன் தன்னுடைய கூட்டாளி கத்தி வைத்து இருந்ததை அறிந்து இருந்தானா என்பதற்கான என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று நீதிபதி விவரித்து இந்த தீர்ப்பினை வழங்கினார்.

இருப்பினும் எம்மா லவல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நடத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கான தண்டனை டிசம்பரில் விதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சிறுவன் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டதற்கு Emma Lovell-இன் கணவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...