NewsDomino's Pizza தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு

Domino’s Pizza தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு

-

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக டொமினோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய டொன் மெஜி ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை Domino’s Pizza chain நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோமினோஸ் நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த அவர், 22 ஆண்டுகள் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை வகித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் உள்ள Redcliffe இல் டெலிவரி டிரைவராக பணிபுரியத் தொடங்கிய டான் மெஜி, தான் Domino’s இன் CEO ஆக வருவேன் என்று நினைக்கவே இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் டோமினோஸ் பீட்சா சங்கிலியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, நிறுவனம் பல பெரிய சாதனைகளை அடைந்துள்ளது.

காம்பஸ் குழுமத்தின் பிராந்திய நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய மார்க் வான் டிக் டொமினோஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...