Breaking Newsஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40'C ஐ தாண்டும் அபாயம்

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40’C ஐ தாண்டும் அபாயம்

-

கிழக்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அடுத்த சில தினங்களில் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் அந்த பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வினால் ஏற்பட்ட வெப்ப அலைகளின் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

30 பாகை செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் மேற்கிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக கிரேட்டர் சிட்னி பகுதியில் பூரண தீ தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை பிறிஸ்பேனில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களில் வெப்பநிலை உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் பணியகம் (BoM) முன்னர் அறிவித்த வெப்ப அலை எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், இந்த நிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த வெப்பமான காலநிலை அடுத்த வாரம் வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் (BoM) மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...