Breaking Newsஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40'C ஐ தாண்டும் அபாயம்

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40’C ஐ தாண்டும் அபாயம்

-

கிழக்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அடுத்த சில தினங்களில் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் அந்த பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வினால் ஏற்பட்ட வெப்ப அலைகளின் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

30 பாகை செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் மேற்கிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக கிரேட்டர் சிட்னி பகுதியில் பூரண தீ தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை பிறிஸ்பேனில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களில் வெப்பநிலை உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் பணியகம் (BoM) முன்னர் அறிவித்த வெப்ப அலை எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், இந்த நிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த வெப்பமான காலநிலை அடுத்த வாரம் வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் (BoM) மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...