Newsஜனவரி முதல் முகத்தை மூடி பொது இடங்களுக்கு செல்ல தடை

ஜனவரி முதல் முகத்தை மூடி பொது இடங்களுக்கு செல்ல தடை

-

சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நடைமுறை சில நிபந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில் விமானங்களுக்குள், தூதரக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம், ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத போது, முகத்தை மூடிக்கொள்ளவும் முன் அனுமதி பெற்று வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...