Newsவெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

-

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். இராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா இராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.

தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.

மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...