Newsவெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

-

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். இராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா இராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.

தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.

மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...