Newsஅடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

-

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு விக்டோரியா மற்றும் கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் (BoM) எதிர்பார்க்கிறது.

விக்டோரியா மாகாணத்திற்கு வானிலை ஆய்வு மையம் (BoM) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மாநிலத்தில் புயல் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 150 கிலோமீற்றர் வேகத்தில் காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய கடும் மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு கடுமையான புயல் நிலை கிழக்கு நோக்கி நகரும் எனவும் அந்த நிலை சிட்னி கடற்கரை மற்றும் சில பகுதிகளை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாகாணத்தில் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் பணியகத்தின் (BoM) இணையத்தளத்தில் காணப்படும் வானிலை எச்சரிக்கைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...