Newsஅடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

-

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு விக்டோரியா மற்றும் கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் (BoM) எதிர்பார்க்கிறது.

விக்டோரியா மாகாணத்திற்கு வானிலை ஆய்வு மையம் (BoM) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மாநிலத்தில் புயல் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 150 கிலோமீற்றர் வேகத்தில் காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய கடும் மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு கடுமையான புயல் நிலை கிழக்கு நோக்கி நகரும் எனவும் அந்த நிலை சிட்னி கடற்கரை மற்றும் சில பகுதிகளை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாகாணத்தில் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் பணியகத்தின் (BoM) இணையத்தளத்தில் காணப்படும் வானிலை எச்சரிக்கைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...