Newsபாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

-

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு அமர்வுகளில் மத்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார்.

12 மாதங்களுக்குப் பிறகு இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர்களும் தன்னைப் போன்று இணையம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பத்தை இளைஞர் சமூகம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை உலகின் பல நாடுகள் கண்காணிக்க முற்படும் வேளையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீம் நடைமுறை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் மெட்டாவின் பாதுகாப்புத் தலைவர் ஆன்டிகோன் டேவிஸ், நிறுவனம் அரசாங்கத்தின் முடிவை மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு சில கல்வியாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...