Newsபாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

-

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு அமர்வுகளில் மத்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார்.

12 மாதங்களுக்குப் பிறகு இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர்களும் தன்னைப் போன்று இணையம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பத்தை இளைஞர் சமூகம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை உலகின் பல நாடுகள் கண்காணிக்க முற்படும் வேளையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீம் நடைமுறை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் மெட்டாவின் பாதுகாப்புத் தலைவர் ஆன்டிகோன் டேவிஸ், நிறுவனம் அரசாங்கத்தின் முடிவை மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு சில கல்வியாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

பிளாஸ்டிக் குடிநீர் குழாய்களுக்காக பிரபல ஆஸ்திரேலிய உணவகத்திற்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபலமான உணவகச் சங்கிலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Bubble tea மற்றும் பேக்கரி சங்கிலியான Top Tea-இற்கு $2,035 அபராதம்...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...